கனவல்ல! அஃதே அவள் வீடு! உறுதியானது
அவள் வாகனத்தோடு வெளியே வந்தாள்
குளிக்கவில்லை இன்னும், ஆனாலும் அழாகாய்
இருந்தாள், தூக்கம் தெளியாமல்
எங்கே செல்வாளோ தெரியவில்லை
கேட்டால் தான் சொல்வாளோ?
உன் பெயறென்ன சொல்வாயோ அழகே?
மனதிற்குள் கேட்டான் விடையின்றி
வரும் வரை காத்திருப்போமா?
இல்லை... பின் தொடர்வோமா? விடிகாலை
ஆதவன் பொற்பிழம்பாய் உதித்தான் அழகாக
அதே தேனீர் கடையில் சூடாய் தேனீர்
பால் வாங்கி வந்தாள் பனியில் நினைந்து
வாசல் தெளித்து கோலமிட்டாள்
அவள் போட்டதால் இவனுக்கது அழகாய்
பலகோணங்களில் புகைப்படம் இவன் கண்களால்!
முன்னுரை
இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
Tuesday, September 25, 2007
Subscribe to:
Posts (Atom)