அடடா! கேமரா இல்லாமல் போனதே
இந்த வேட்க்கதத்தை அதனுள் அடைக்க
என்ன ஒரு இரம்மியமான மாலை?
அறை நிலவு, குளத்தில் குப்பைகளுக்கு ஊடே பிம்பமாய்
தெருவெங்கும் தோரணமாய் பூமாலை கடைகள்
பன்னீர் வாசம் இரோஜக்களின் உரசல்
முழுதாய் இழுத்த மூச்சை மெதுவாக விட்டான்
ஆமாம் என்னிடம் நீங்கள் என்ன பேச வேண்டும்?
ஏன் நானதை கேட்க்கவேண்டும்?
ஹ ஹ ஹ பெண்கள் திருந்தவே மாட்டீரா?
இதே வசனத்தை எத்தனை முறை கூறுவீர்?
ஓஹோ! எத்தனை பெண்களிடம் இப்படி
மாலை வா பேசவேண்டும் என்றீர்?
அவள் பொய் சீற்ரமாய்!
இவன் தலை திருப்பி நகைத்தான்
ஓரக்கண்களால் அவளைக் கண்டு
ஹே என்னை மனப்பாயா? உன்னை பிடித்திருக்கிறது
எதையோ கைகாட்டினான்
சுவரொட்டியில், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
பயப்பட நான் என்ன பேயா?
பேய்கள் இவ்வளவு அழகாய்
இனிமையாய் இருக்குமா என்ன?
அவள் தன்னை சுற்றி பார்த்தாள்
மயிலை தெற்கு மாட வீதி
பூக்கடைகள் போக்குவரத்து நெரிசல்
காதலை சொல்ல இதுவா இடம்? என்றாள் முகம் சுளித்து
ஆம்! என்றால் இப்படியே மாலை போடலாமென்று,
நகைத்தான் நகைத்தாள் மௌனமானாள்!
முன்னுரை
இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
Saturday, November 24, 2007
Subscribe to:
Posts (Atom)