விடிகாலை ஐந்தேயானாலும் முழுமையாய் விழித்திருந்தேன்
உடற்பயிற்சி என்று காலணிகளோடு
வியர்வை சிந்த மூச்சு முட்ட
ஓடினேனோ? தேடினேனோ? தெரியவில்லை தெருத்தெருவாய்
ஒரு வீதி மிச்சமின்றி ஒட்டமும் நடையுமாய்
இருபக்கம் பார்த்தும் அவ்வப்போது திரும்பியும்
புதிதாய் நானோட, நாய்களும் குரைக்க,
இரக்கமே இல்லாமல் கால்கள் என்னைத் திட்ட
அவசரமாய் அலுவலகம் செல்ல விரைந்தேன்
அலமாரி முழுதும் ஆடைகள் இருந்தும்
அனைத்தும் உடுத்தி திருப்தியின்றி கலைத்தேன்
அவளைப் பார்க்கும் தருணம் எதிர்பார்த்து
பத்துமணிக்கே அலுவலகம், ஒன்பதுமணிக்கு பேருந்து
பைத்தியமாய் எட்டுமணிக்கெல்லாம் சென்றேன்
பண்பட்டவனாய்த் தெரிய அவ்வப்பொழுது சரிசெய்தேன்
பளிச்சென்று வருவாளோ பரபரப்பாய் நானிருந்தேன்.
முன்னுரை
இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment