தாழிட்ட கதவுகளை தட்ட தாய் திறந்தாள்
தன்வீட்டிற்கு எப்படி வந்தேன்? முழித்தான்!
அவள் வீட்டுக்கதவையன்றோ தட்டுவதாய் நினைத்தேன்
அச்சோ இதுவரை கண்டது கற்பனையோ? கனவோ?
கனவின்றி இருக்க வேண்டினான்
என்னவாயிற்று இவனுக்கு எதைபற்றி யோசிப்பு
விளங்காமல் வினவினாள் தாய்
எந்த சாவியை தேடிச் சென்றாய்?
ஒருவரை கண்டேன் பழக்கமுற்றவரோ
என யோசித்தேன் யாராகயிருக்குமோ
விளங்காமல் வியப்புடன் ஆராய்கின்றேன்
என கூறி தாயிடம் விடைபெற்று சமாளித்தான்
நாளை காலை வெள்ளெனச்சென்று
அவள் வீட்டை உறுதி செய்ய முனைந்து
சட்டென்று உறங்கினான் உணவுண்ணாமல்
இன்று நடந்தவை மறுஒளிபரப்பானது கனவினில்!
முன்னுரை
இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment