நொடியாய்ப் பறந்தது மணிநேரப் பொழுது
என் பேருந்து நிறுத்தம் வந்தும் அவள்
இறங்கவில்லை எனக்கோ இறங்க மனமில்லை
இரக்கமில்லா இறைவனை இறைஞ்சி அழைத்தேன்
என்னுள் எதிரெதிராக நானும் மனதும்
அலுவல் செல்ல நேரமானதை உணர்ந்து
இறங்கு!! என்றது ஒன்று- நழுவ
விடுவது ஏனோ என்பது மற்றொன்று
முடிவில் மனது வென்றது இறங்கநினைத்து
ஏக்கமாய்ப் பார்த்தேன் அவளை நிமிர்ந்து
என் மனக்குரல் கேட்டதோ தெரியவில்லை
பார்த்தாள் என்னை தலை நிமிர்ந்து
எதையோ தொலைத்தது போல் புரியாமல்
தயங்கி நிற்க வண்டிநகர உத்தரவானது
அதையும் பொருட்படுத்தாமல் சிலர் ஏறி
இறங்கவும்இறங்காமல் இருக்க சபலப்பட்டது உள்ளம்
முன்னுரை
இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment