முன்னுரை

இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.

சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.

இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.

Thursday, August 23, 2007

1.10 கனவில் எத்தனை சுகம்!!

மனம் பலமானதோ? பணியிடையில் நினைவில்லை.
மாலையில் பேருந்து கூட்டத்தில் தனிமையில்
கண்மூடி நானிருக்க அவள் நினைவு
கருமேகமாய் புரண்டுவந்து கனிய

பல கேள்விகள் பல சிந்தனைகள்
பல முறை அவள் முகம்
புகையென என் இமையுள்
படுத்தும் உறங்க இருமணிநேரம்

மணந்த கையோடு நானும் அவளும்
புதுவாகனத்தில் இடவலமாய் அமர
வழியில் கவனமின்றி கண்ணடிக்க
வெட்கத்தில் அவள் நாணி நெளிய

ஓய்வாக சாலையோரம் வாகனத்தில்
நெஞ்சோடு அள்ளி அவளணைக்க- கவலையற்ற
குழந்தையாய் எனக்கே எனக்காய் அவள்
கலைந்த கனவில் எத்தனை சுகம்!!

No comments: