மெய் அப்பன் அவனுளன் என
மெய் சிலிர்க்க வைத்தான், என்னை!
மெய்யோடு என் உயிரைக் கலந்த அவளை,
மெய்யாகப் பார்த்ததும், மெய் மறந்தேன்!
அவள் பொன்னோ, சிலையோ, வரைந்து
வைத்த சித்திரமோ, விளங்காமல் திகைத்தேன்!
கைப்படாமல், தேவதை தந்த பிரசாதமாய்
பேருந்துச் சீட்டும், சில்லறைக் காசும்!
பாவையவள் பதுமைபோல் அழகாய் இருந்தாள்
நீளச்சுருள் கூந்தலும், அதில் அழகான புஶ்பமும்,
கலையான முகமும், வெண்ணிற ஆடையும்,
வெண்ணிலவெனக் கண்டேன் மென்மையாய் நகைத்தாள்.
ஒடுங்கியுமின்றி பூசியுமின்றி அளவாய்,
அவள் அறியாமல் அவளழகை ரசித்தேன்.
அலுங்காமல் இருந்தாள், கொளுத்தும் வெயிலிலும்!
குளுமைக்காகச் சென்றேன், அவளருகே நான்!!
முன்னுரை
இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment