முன்னுரை

இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.

சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.

இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.

Thursday, August 23, 2007

1.7 வந்தாள் என் தேவதை

மானே தேனே மயிலே என்று
எதுகையும் மோனையும் தவழ பாடும்
புலவனோ நான், இல்லை- காதலியை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் காதலனடி நான்!

காதலனும்! காதலியுமா? என வியப்பில்
விவரம் ஏதும் அறியாமல், மனதில்
கலவரம் கொள்ளாமல், நிலவரமறிந்து,
சுயவரன் தேடாதே! ஆணையிட்டது மனது!

எனக்கான பேருந்து முந்திக்கொண்டு வர
வேண்டா வெறுப்பாய் அலுவல் செல்ல
புழுக்கம் சூழ நெரிசல் சூழ
இன்று போய் நாளைவா என்பதுபோலானது

ஓடியும் தேடியும் வீதிகளில் அலைந்தும்
இருமணிநேரம் காத்ததும்- இறைவா!!
பயனற்றுப்போனதோ? என்றபோது- நடத்துநரிடம்
என்சீட்டைப் பெற்றுத் தந்தாள் என்தேவதை.

No comments: