வீடு வரை வந்ததும் தலை சொறிந்தான்
எதையோ தேடுவது போல் பாவித்தான்
"என்ன தடவுகிறாய்" என்றனள் தாய்"
வண்டிச் சாவியை காணவில்லை"
"விழுந்து எழுந்ததில் விழுந்திருக்கும் போலும்
விட்ட சாவியை தேடி வருகிறேன்
வரும்போது உனக்கேதும் வாங்கிவரவா?"
விடைவருமுன் விரைந்தான் கோவிலுக்கு
"என்ன இப்படி பிதற்றினேன்?
கோவிலுக்கு நடந்தல்லவா வந்தோம்?
என்னவானால் என்ன வரவேண்டும் வந்தாயிற்று
என்னவள் அங்கு இருப்பாளோ?"
கோவில் வீதி நுழைந்தேன்
அவள் எதிர் வீதியில் திரும்பி மறைந்தாள்
நல்லவேளை கண்டுகொண்டேன்
விரைந்தேன், எந்த வீட்டில் அதற்குள் மறைந்தாள்?
முன்னுரை
இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Hi Karthik,
Am
Nandhini..
MMM..... Atharkul Maraindhal...
Really good..
Post a Comment