மறைந்தது எந்த வீட்டிற்குள்ளோ?
அடக்கடவுளே! எனக்கேன் இத்தனை சோதனை?
எந்த வீடென்று எப்படி அறிவேன்?
சற்றே பொறுப்போம் வழி பிறக்கும்! பொறுத்தான்
பொறுத்த வேளையிலே தேனீர் பருக
கடைக்காரன், " என்ன சாமி தேனீ குடிக்கவா
இந்த வேகம் ஒடியாந்த", என்றான் நக்கலாய்
புன்னகித்து தெருவை நோட்டம் விட்டான்
'விட்ட சாவியையா தேட வந்தோம்?'
தனக்குத்தானே எள்ளி நகைத்தான்
சற்றே தொலைவில் மீண்டும் அவள்!
அறிவுசட்டேன்று பொறுத்திருக்க கட்டளையிட்டது
கட்ட்ளை மீறாமல் தொலைவில் நோக்கினான்
வாழ்வின் தொலைநோக்கில் அவளும் பகிர்வாளோ?
மறுபடியும் ஒரு வீட்டிற்குள் நுழைந்தாள்
அஃதே அவள் வீடுபோலும், சென்றவள், கதவை தாழிட்டாள்!
முன்னுரை
இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment