காவலாய் நானிருக்க என் உள்ளமோ
சிறைதாண்டும் கைதியானது அவளைக்காண
நூருமுறை பார்த்தேன் கடிகாரத்தில் நேரம்
இரக்கமற்ற முட்கள் மெதுவாய்ச் சுழன்றது
பேருந்தின் நேரப்பட்டியலைப் பலமுறை பார்த்தேன்
என் கடிகார நேரத்தை சந்தேகமற களைந்தேன்
எனக்கான இரண்டு பேருந்தை நழுவவிட்டேன்
அவளேறும் பேருந்திற்காக காத்திருந்தேன்
முக்கி முனங்கி இருமணிநேரம் சென்றது
நான்கு முறை தேனீர் பருகியானது
புகைப்பிடிக்கும் பழக்கம் எனக்கில்லை என்றாலும்
புகைப்போர் விடும்புகை என் சுவாசமானது
நேற்று இந்நேரம் அவள் வந்தநேரம்
இன்றும் வருவாளோ வாராமல் போவாளோ?
இருமணிநேரம் தவமாய் நின்றதற்கு
மறுமுறை காணும் வரம் தருவாளோ?
முன்னுரை
இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Hi Am Nandhini,
I Read All Ur Poems Its Really Awsome...
Post a Comment